Header Ads



கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸின் நினைவுப் பேருரை


எம்.ஐ. அஸ்ஹர் + ஷபீக் ஹுஸைன்

அஸீஸ் பௌன்டேஸன், வை.எம்.எம்.ஏ. ஆகின இணைந்து நடத்திய கலாநிதி அஸீஸின் நினைவுப் பேருரை கொழுப்பு ஸாஹிரா கல்லூரி கபூர் மண்டபத்தில் நேற்று மாலை (2012.10.04)ம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி அல்லாமா இக்பாலின் தத்துவங்கள் சமகாலப் பிரச்சினைகளுடன் தொடர்புபடும் விதம் (Relevance of Iqbalian Philosophy to contemporary issues ) என்ற தலைப்பில் கலாநிதி எம்.ஏ. ஷுக்ரி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைவர் கே. டீன் மற்றும் அஸீஸ் பௌன்டேஸன் தலைவர் எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோர் உரை நிகழ்த்துவதையும் கலந்து கொண்டோரையும் படத்தில் காணலாம்.

இதன்போது கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களால் 1973இல் வெளியிட்ட ‘அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என்ற நூல் மீள் பிரசுரம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








1 comment:

  1. யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த கல்வி மகன்

    ReplyDelete

Powered by Blogger.