Header Ads



கட்டார் வாகன விபத்தில் இலங்கை முஸ்லிம் சகோதரர் வபாத் (படங்கள் இணைப்பு)



(ஜே.எம்.ஹபீஸ்)

கண்டி, மடவளை பஸாரைப்பிறப்பிடமாகக் கொண்ட 34 வயது குடும்பஸ்தர் கட்டாரில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் மரணமானார்.

(28.10.2012) கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்ற இவ்விபத்தில் அவருடன் பயணம் செய்த மடவளையை வங்குவக் கடையைச் சேர்ந்த இன்னொரு இளைஞரும் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் மரணமானவர் மடவளை கொட்டுவேகெதரை என்ற இடத்தைச் சேர்ந்த அபுல் ஹஸன்  என்பவரின் மகனான முகமட் ரிஸ்வான் என்பவராகும்.

எட்டு வயது ஆண் பிள்ளை ஒன்றின் தந்தையான இவர் மாவனல்லையில் திருமணம் செய்துள்ளதுடன் மடவலை, நுகதெனிய (ஊராதெனிய) என்ற இடத்தை வசிப்பிடமாகக் கொண்டவராகும்.

கட்டாரில் இவர்கள் பயணம் செய்த 'பிராடோ' ரக வாகனம் குறுக்குப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு பிரவேசிக்கும் போது பிரதான பாதையில் வந்த பஸ்வண்டி ஒன்றுடன் இவ்வாகனம் தவிர்ந்த மேலும் மூன்று வாகனங்களில் மோதியுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.

இவரது ஜனாஸா இன்று (30.10.2012) இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு கட்டாரிலுள்ள அபு ஹமூர் மையவாடியில் இலங்கை நண்பர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.






No comments

Powered by Blogger.