Header Ads



அல் ஜஸீராவை ஹெக் செய்த கொடுங்கோலன் ஆசாத்தின் ஆதரவாளர்கள்

அல் ஜெஸீரா நிறுவனத்தின் இணையத்தளமானது சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஷாத்தின் ஆதரவாளர்களால் நேற்று ஹெக் செய்யப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு நாடுகள் மட்டுமன்றி உலகநாடுகள் பலவற்றிலும் பிரபலமான செய்திச்சேவையே அல் ஜெஸீரா ஆகும்.

ஜனாதிபதி பஷார் அல் அஷாத்தின் அரசாங்கத்துக்கு எதிராக  சித்திரிக்கப்பட்ட போலியான தகவல்களை அல் ஜெஸீரா வழங்கிவருவதாக சிரியா குற்றஞ்சாட்டி வந்தது.

இந்நிலையில் நேற்று அல் ஜெஸீரா இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் தளத்தில் சிரிய நாட்டுத் தேசியக் கொடியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அல் ஜெஸீரா செயற்படுவதாலேயே தளம் ஹெக் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அத்தளம் வழமைக்கு திரும்பியுள்ளது. ' அல் ரசீடொன் ' என்ற ஹெக்கர்களின் குழுவே  இத்தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ளது.
 


2 comments:

  1. அல் ஜெஸீரா பற்றி ஒரு தகவலை இவ்விடத்தில் பதிவு செய்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். நாம் நினைக்கும், இராக் யுத்தத்துக்கு முந்திய அல் ஜெஸீரா அல்ல இப்பொழுதுள்ள அல் ஜெஸீரா. தற்பொழுது அது அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் அலைவரிசை. cnn மற்றும் ஏனைய யூத அலை வரிசைகளில் வேலை செய்த முஸ்லிம்(?) செய்தியாளர்களை கொண்டு நடாத்தப்படுகின்றது. மாற்றம் எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. நீங்கள் அவர்களின் செய்திகளை பார்த்தால் நான் சொல்வது புரியும். அதற்கு இன்னுமொரு ஆதாரமாக சொல்வதானால் , அல் ஜெஸீரா கத்தார் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அலை வரிசை. அதன் செய்திகளின் தாக்கத்தால் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் உந்துதலோ அல்லது கத்தார் அரசின் விசுவாச உணர்ச்சியாலோ தெரியவில்லை கத்தார் நாடு (ஆப்கானிஸ்தான் யுத்த காலம் என்று நினைக்கிறேன்) தடை செய்து விட்டார்கள். பின்னர் வெளி நாடுகளில் இருந்து கொண்டே அல் ஜெஸீரா இயங்கியது. எனக்கு தெரிந்த வரைக்கும் இராக் யுத்தத்தில் அமெரிக்க, ஈராக் படைகளின் ரகசிய சதிகளை அம்பலப் படுத்தி மறுநாளே ஈராக் அல் ஜெஸீரா குண்டு வீச்சுக்கு ஆளானது. அதன் பின்னர் அல் ஜெஸீரா முஸ்லிம்களின் குரலாக இருந்ததாக எனக்குத் தெரியாது. விடயம் என்னவென்றால் கத்தாரில் தடை செய்யப்பட அல் ஜெஸீரா தற்பொழுது கத்தாரை மைய்யமாகக் கொண்டு இயங்குகிறது. சிரியாவில் நடப்பது அநியாயக் கார ஆசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் அல்ல. அநியாயத்தை உபயோகித்து, அம்மக்களையே ரெத்தம் சிந்த வைத்து அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் நடத்தும் எண்ணைக்கான போராட்டம். லிபிய மண்ணில் நடந்த அதே பாணியிலான போராட்டம். தற்போதுள்ள முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் பற்றியும் அப்பொழுது நம்பிக்கையாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அல்லாஹ்வின் தூதர் தெளிவாகவே சொல்லிவிட்டு சென்றார்கள். அதை புறம் தள்ளிவிட்டு அந்நியர்களின் பின்னால் சென்றால் இது தான் நடக்கும். அதற்காக அநியாயக் காரனின் அநியாயத்தை நான் சரி காணவில்லை. இதுபோல சந்தர்ப்பத்தில் மக்களை காக்க, அந்நியர்களை உள்ளே வர விடாமலிருக்க ரசூலுல்லாஹ் சொன்ன வழியைத்தான் பின்பற்ற வேண்டும். நமது போக்கிற்கு
    சென்றால் நிலைமையை மோசமாக்கலமேயோழிய வேறொன்றும் செய்ய முடியாது. மியன்மாரில் ஜிஹாத் தேவை. அங்கு ஜிஹாத் செய்ய யாரும் இல்லை. இங்கே தொழுகைக்கு பிரச்சினை இல்லாத நிலையில் இஸ்லாம் அனுமதிக்காத கிளர்ச்சி. நம்மவர்கள் வாழ்க்கை வழிமுறையில் அந்நியர்களை அணு அணுவாய் பின்பற்றியதன் விளைவு, எந்த இடத்தில் என்ன செய்வதென்று இஸ்லாம் கூறுகிறதென்று தெரியவில்லை. அணியாக்கார ஆட்சியாளர்களுக்கு எதிராய் கிளர்வதிலும் அவர்களையே பின்பற்றி, அவர்களின் உதவியை ஏற்று....

    ReplyDelete
  2. JEZAKKALLAH ENTIRE ARTICLE IS TRU MANY JAAHILIYYA'S BELIEVE THE CONSPIRATORS

    ReplyDelete

Powered by Blogger.