Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் இனவாத பிரசாரம் செய்வதாகக் கூறுவது பித்தலாட்டமாகும்

அரசின் அமைச்சுப் பதவியைப் பெற்றிருந்த நிலையிலும் கூட அரசுடன் சேர்ந்து போட்டியிடக்கூடாது என்ற மௌனப் புரட்சி முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும், அதே எழுச்சி உணர்வுபூர்வமாக முஸ்லிம் மக்களிடையேயும் ஏற்பட்டன. இதனால் ஜனாதிபதியின் கனவு தகர்க்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையேற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டம் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றிலில் . இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டாலும் கூட ஒன்றாகவே வாழ்வோம், ஒன்றாகவே ஆள்வோம் என்ற திடமான உறுதியைக் கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் தம் ஜனநாயகத் தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.  உலகை ஏமாற்றும் நோக்குடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு முன்வந்ததும், முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து அந்தத் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தது.

அரசின் அமைச்சுப் பதவியைப் பெற்றிருந்த நிலையிலும் கூட அரசுடன் சேர்ந்து போட்டியிடக்கூடாது என்ற மௌனப் புரட்சி முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும், அதே எழுச்சி உணர்வுபூர்வமாக முஸ்லிம் மக்களிடையேயும் ஏற்பட்டன. இதனால் ஜனாதிபதியின் கனவு தகர்க்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையேற்பட்டது.

ஆனால் முஸ்லிம் மக்களிடம் ஏற்பட்ட இந்த உணர்வுகூட முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் போன்றவர்களுக்கு இல்லையே என நம் மக்கள் கிளர்ந்தெழாதது தான் நாம் விட்டதவறாகும். எனினும்  இத்தகையவர்களுக்கு மக்கள் நாளை மறுதினம் தக்க பாடத்தைப் புகட்டத்தான் போகின்றனர்.
 
இன்று ராஜபக்ஷ அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் அதே அநீதிகளைத் தான் முஸ்லிம் மக்களுக்கும் இழைத்து வருகின்றது. முஸ்லிம்களின் இன்றைய ராஜபக்ஷ அரசுக்கு எதிரான எழுச்சியும், தொடர்ச்சியான தமிழ் மக்களின் திடசங்கற்பம், ஜனநாயகத் தீர்ப்புகள் உலகத்தைக் கண்விழிக்கச் செய்திருக்கின்றது. முஸ்லிம் மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும் சர்வதேசம் மதிப்பிட்டு வருகின்றது.

இந்த நிலையில் எம் உரிமைகளுக்காக முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுபட்டிருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத பேரினவாதசக்திகள், பேரினவாத பௌத்த சக்திகள் துவேச அடிப்படையில் பிதற்றத் தொடங்கியுள்ளன.

எம் நிலத்தை அபகரிக்காதே, எம்மத சுதந்திரங்களில் கைவைக்காதே, அநீதி செய்யாதே, எம்மை மீள்குடியேற்ற அனுமதி, வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கி பௌத்த குடியேற்றங்களைச் செய்யாதே, பள்ளிவாசல்களை, இந்துக் கோயில்களை இடிக்காதே என நாம் குரலெழுப்பினால் அது இனவாதமாகுமா? பொறுப்பு வாய்ந்தவர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் இனவாதத்தை விதைக்கும் வகையில் பிரசாரம் செய்வதாகக் கூறுவது அறியாமை, பித்தலாட்டமாகும் என்றார்.

1 comment:

  1. முஸ்லிங்கள் மீது தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டுள்ள அனுதாபம் நியாயமானதே. ஏனென்றால் அவர்கள் முஸ்லீங்களுக்காக போராடி வந்தவர்களே. அவர்கள் யாழ் முஸ்லீங்களை விரட்டவில்லை. மன்னார் முஸ்லீங்களை விரட்டவில்லை. முஸ்லீங்களை கொல்லவில்லை அநியாயம் செய்யவில்லை. முஸ்லிம்களின் உரிமைக்காக 30 வருடங்களாக போராடினார்கள். எனவே இவர்களின் உண்மையான அனுதாபத்தை புரிந்துகொண்டு முஸ்லிம்கள் நிச்சயம் அவர்களுடன் இணைய வேண்டும். ரவுப் ஹக்கீம் நிச்சயம் அதைச் செய்வார்.

    ReplyDelete

Powered by Blogger.