சிறைச்சாலை கைதிகளில் 5259 பேர் ஓ.எல். பரீட்சை எடுத்தவர்களாம்..!
இக்பால் அலி
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 5259 பேர் க. பொ. த. சாதாரண தரம் மற்றும் உயர் தரம் தோற்றியவர்களே அதிகம் பேர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4970 பேர் க. பொ. த. சாதாரணத்தில் தோற்றியவர்கள் எனவும் 1189 பேர் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதில் கூடுதலானவர்கள் போதைப் பொருள் பிரச்சினைக்குள்ளானவர்கள் என சிறைச்சாலைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த நபர்களுடன் 154 பேர் பெண்கள் உள்ளனர் எனவும் சிறைக்கைதிகளாக கூடுதலான 30 – 40 இடைப்பட்டவர்களே உள்ளதாக என சிறைச்சாலைகள் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Post a Comment