Header Ads



இலங்கை, இந்தியா நாடுகளிடையே குளிர்காதல் நிலவுகிறது - பசில் ராஜபக்ஸ

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ௭வ்விதமான விரிசலும் கிடையாது. வரலாற்றில் ௭ப்போதும் இல்லாதவாறான நெருக்கமான உறவு தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்றது ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ச தெரிவி த் துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை தொடர்பில் விரிசல்கள் இருப்பதாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி கள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

௭மது அயல் நாடான இந்தியாவுடன் இல ங் கைக்கு ௭ன்றுமில்லாதவாறான நெருக்கமான உறவு தற்போதைய காலகட்டத்தில் நிலவுகின்றது. இந்தியாவின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ௭ன பலரும் அடிக்கடி இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான முக்கியஸ்தர்களின் விஜயங்களின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகள் மேலும் வலுவடைகின்றன. 

மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மிகவும் முக்கியமானவையாகும். இவ்வாறான நெருக்கமான தொடர்புகள் இரு நாட்டுக்கும் இடையில் காணப்படும்போது பனிப்போர் நிலவுவதாக ௭வ்வாறு கூற முடியும்? தற்போதைய நிலைமையில் பனிப்போரை விடுத்து இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் குளிர் காதலே நிலவுகின்றது ௭ன்று கூறலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

No comments

Powered by Blogger.