Header Ads



'முஸ்லிம் சமூகத்தின் இருப்பை பாதுகாக்க வேண்டும்' - ரவூப் ஹக்கீம் அழைப்பு

 
TM

கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக பெண்களுக்கு விளக்கமளிக்கும் பெண்கள் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மலையடி கிராமத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில்,
 
 "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனிநபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் நீண்ட காலம் வேண்டும். அது முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்க வேண்டும். அது தான் முக்கியம்.  கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி நன்றாக ஒரு பழுத்த பழமாக இருக்கின்ற நிலையில் அதனை குத்திப் குத்தி பார்போமாயின் பழம் அழுகிப்போய்விடும்.
 
 அதனை எவரும் தற்போதைய கட்சியின் நிலவரத்தில் என்ன விடயமென்று பழத்தினை பார்க்கின்ற மாதிரி குத்த வேண்டாம் என்று கட்சி அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்களை வேண்டிக் கொள்கின்றேன்.
 
எமது பலம் பழுத்த பழம் மாதிரி தேர்தலின் வெற்றிக்காக கனிந்து வருகின்ற இந்த பழத்தினை அழுக விட வேண்டாம். தேவையில்லாத சிறு சிறு பிணக்குகளை பெரிதுபடுத்தி இதில் ஏதோ பின்புலம் இருக்கின்றது என்று புரிந்து கொண்டாலும்  கட்சி அபிமானிகள், ஆதரவாளர்கள் இன்று முதிர்ச்சியுள்ளவர்கள் காலம் காலமாக இக்கட்சிக்குள் நடக்கின்ற அநீயாயங்களை பற்றி அடையாளம் கண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையிலேயே கொஞ்சம் அங்கலாய்ப்பு இருக்கத்தான் செய்யும் என்றாலும் அவற்றினை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
 
 தனிநபர்களின் அரசியலில் ஏற்பட்ட சில தடுமாற்றங்களின் விளைவாகத்தான் எமது கட்சிக்குள் பிளவுகள் வந்துள்ளது. கட்சிக்குள் ஏதாவது பிளவுகள் பிரச்சினைகள் ஏற்பட்டால் தனிநபர்களுடைய அரசியல் அந்தஸ்துடைய பிரச்சினைகளிலே ஏற்படுகின்ற தடுமாற்றங்களின் பி்ன்னணிலே ஏதாவது கொள்கை ரீதியான விசயங்களை கொஞ்சம் துாக்கிப்பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையில் பிரிகின்றோம் என்று சொன்னாலும் இந்த கட்சி சந்திக்கின்ற எல்லாப் பிளவுகளும் ஏதோ அடிப்படையில் தனிநபர் அரசியல் அந்தஸ்து சம்பந்தமான பிணக்கு பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டது. என்பதனை நான் சரியாக அடையாளம் கண்டுள்ளேன்.
 
 கொள்கை ரீதியாக கட்சிக்குள் பிளவுகள் பிரச்சினைகள் ஏற்பட்டது என்று எவறாவது சொல்லியிருந்தாலும் கொள்கையை வெறும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சினைகளின் பிரதிபலிப்பாக துாக்கிப்பிடித்தால் ஒழிய உண்மையில் அது தனிநபர் அரசியல் அந்தஸ்து சம்பந்தமான பிரச்சினைகளின் வெளிப்பாடு என்றுதான் சொல்லலாம்.
 
 இன்றைக்கு இருப்பது தனிநபருடைய அரசியல் சம்பந்தமான பிரச்சினையல்ல. இன்று இருப்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சம்பந்தமான பிரச்சினையாகும். தேர்தலின் மூலம் மக்கள் தருகின்ற அரசியல் அதிகாரத்தினை எமது சமூகம் இழந்துள்ள அனைத்தினையும் மீட்டிக்கொள்கின்ற ஒரு வழியாக கிழக்குத் தேர்தல் அமையுள்ளது.
 
கிழக்கு மாகாண ஆட்சியில் இதுவரைக்கும் எதனையும் அனுபவிக்கவில்லை. எதிர்க்கட்சியில்தான் இருந்து வந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுயில்லாமல் எவரும் ஆட்சியமைக்க முடியாத நிலவரத்தினை தனித்துப் போட்டியிட்டதனால் ஏற்படுத்தியுள்ளோம்.
 
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் இன்றைக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் அரசியல் பலத்தினைதான் நம்பியுள்ளார்கள். ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் இன்று அமைதியாக நிம்மதியாக தங்களது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
இந்தச் சுழலில்தான் அவர்கள் எதிர்பார்த்திருப்பது முஸ்லிம்களுடைய பலத்தினைக் காட்டுவதற்கு இடம் தேவை எனின் அது கிழக்கில்தான் காட்டலாம். எனவே எதிர்வருகின்ற இத்தேர்தலில் தாய்மார்கள் சகோதரிகள் எல்லோரும் ஒன்றினைந்து எமது கட்சியின் வெற்றிக்கான பணியில் ஈடுபட்டு எமது சமூகத்தின் இருப்பை பாதுகாக்க வேண்டும்' என்றார்.
 
 இதில் வேட்பாளர்களான ஐ.எல்.எம்.மாஹிர், எம்.ஐ.எம்.மன்சுர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.முஸ்தபா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பெரும்திரளான பெண்களும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.