மன்னார் நிலவரத்தை நேரில் கண்டறிய சர்வமத குழு விஜயம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
மன்னாரின் தற்போதைய நிலையினை கண்டறிந்து இனங்களுக்கிடையில் ஜக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வமத குழுவினர் நாளை வெள்ளிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்கின்றனர்.
இவ்வாறு மன்னாருக்கு விஜயம் செய்யும் குழுவினர்,மன்னார் மாவட்ட்த்தில் வாழும்,முஸ்லிம்,இந்து ,கத்தோலிக்க,பௌத்த மதத்தினரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
அதேவேளை நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மூர் வீதி ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு செல்லும் இக்குழுவினர் முஸ்லிம் மக்களுடன் கருத்துப் பறிமாறல்களை செய்யவுள்ளனா.

Post a Comment