Header Ads



கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்து - ஒருவர் மரணம் - 11 பேர் காயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார்.

புத்தளம் - அனுராதபுரம் வீதியில் உள்ள 5ம் கட்டை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

No comments

Powered by Blogger.