தறாவிஹ் தொழுதுவிட்டு வீடு சென்று கொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கி 10 பேர் மரணம்
வங்காளதேசத்தில் உள்ள சியால்ஹெட் மாவட்டத்தில் ஒரு பள்ளி வாசலில் புனித ரமலான் மாதத்தையொட்டி நேற்று விசேஷ தொழுகை நடந்தது. அதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.தொழுகை முடிந்ததும் அனைவரும் வெளியேறி தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தபோது மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 10 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இன்னலிலாகி வஇன்ன இழைகி ராஜூன்
ReplyDeleteயா அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தை கொடுப்பாயாக ஆமின்