Header Ads



கோழி சூப் வழங்க தயார் - ஜனாதிபதி மஹிந்த சொல்கிறார்.

நான் ஒரு ஜனநாயகவாதி. ஊடக சுதந்திரத்தை கட்டிக் காப்பவன். என்னை ஏசுபவர்களும், தூற்றுபவர்களும் என்னை வந்து பார்க்க விரும்பினால் நான் அவர்களுக்கு நிச்சயம் அதற்கான சந்தர்ப்பத்தை கொடுப்பேன். ஆனால், அவர்கள் செய்த பிழைகளுக்கு சட்டப்பூர்வமான தண்டனையில் இருந்து விடுவிக்க மாட்டேன். அவர்கள் இரவில் வந்தால் கோழி அவர்களுக்கு சூப்பும் கொடுக்கு தயங்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.