Header Ads



தறாவிஹ் தொழுகைக்காக பள்ளிக்குச் சென்றவர்கள் வீட்டில் கூரையை பிய்த்து கொள்ளை


AD - T

பொகவந்தலாவை - செல்வக்கந்தைத் தோட்டத்தில் உள்ள வீடொன்றில் அண்மையில் யாருமற்ற நேரத்தில் வீட்டின் கூரையின் ஊடாக உட்புகுந்து தங்க நகைகளைத் திருடிய நபரொருவரை கைது செய்துள்ள பொகவந்தலாவைப் பொலிஸார் அவரை இன்று 31 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

குறிப்பிட்ட வீட்டைச் சேர்ந்தவர்கள் நோன்பு காலத்தை முன்னிட்டு தொழுகைக்காக இரவு நேரத்தில் பொகவந்தலாவை பள்ளிவாசலுக்குச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த நபரொருவர் வீட்டின் கூரையின் ஊடாக வீட்டினுள் சென்று சுமார் ஐந்தரை இலட்சம் பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டாரின் உறவினர் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்குச் சந்தேககம் வந்துள்ளது.

அதன் பின்பு குறிப்பிட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேக நபர் பொகவந்தலாவை பொய்ஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.

1 comment:

  1. சொந்தக் காரனே திருடனா?

    வெட்கக் கேடு.

    ReplyDelete

Powered by Blogger.