Header Ads



தாருஸ்ஸலாமில் இன்று முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தெரிவு

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவு இன்று சனிக்கிழமை மாலை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்பேரில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடுவதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் 6 வேட்பாளர்களையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வேட்பாளர்களையும், திருகோணமலை மாவட்டத்தில் 3 வேட்பாளர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்துவதென தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.