Header Ads



தம்புள்ள புனித பூமி பிரச்சினைக்கு 60 நாட்களில் தீர்வின்றேல் அழிவு ஏற்படுமென எச்சரிக்கை

GTN

தம்புள்ளை புனித பூமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக தான் சகல தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் 6 மாதங்களில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்வுகாணப்படாதது கவலைக்குரியது. இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல், பிரச்சினை உக்கிரமடைந்தால், அந்த தம்புள்ள பிரதேசத்திற்கு செல்வவே போதில்லை எனவும் மாநாயக்க தேரர் கூறியுள்ளார்.

தம்புள்ளை பிரச்சினையை மையப்படுத்தி, கலவரங்கள் எதுவும் ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் புத்தசாசன அமைச்சே ஏற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தசாசன அமைச்சின் புதிய செயலாளராக பொறுபேற்றுக்கொண்ட கே.பி. திஸாநாயக்க அஸ்கிரிய மாநாயக்க தேரரை சந்தித்து ஆசிபெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.

3 comments:

  1. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எதுவுமில்லை.

    பள்ளிவாசல் அதனிடத்திலே இருக்கும்.
    பன்சலை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்
    எல்லாம் செளக்கியமே.

    ReplyDelete
  2. Bhudist Temple should change another place if they want to living really peacefull in Dambulla!

    ReplyDelete
  3. paithiyak kaaranval.. ivangalai kulavi kottiyadu podadu pola

    ReplyDelete

Powered by Blogger.