மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் ரவூப் ஹக்கீம் - றிசாத் பதியுதீன் லடாய்..!
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அதான் ஒலிப்பதனை நிறுத்தப்போவதாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே ஜனாதிபதி மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்டுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், அப்படிப் பிரச்சாரம் செய்தவர்கள் உங்களுடன்தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
அந்தவேளையில் குறுக்கிட்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், எங்களுக்கு அவ்வாறு குற்றம் சுமத்த வேண்டாம். நாங்கள் அப்படிப் பிரச்சாரம் செய்யவில்லையென றிசாத் பதியுதீனை பார்த்து குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் றிசாத், நான் உங்களைப் கருத்துப்படக் கூறவில்லை என்று தெரிவித்துள்ளர்.

Vengayams...
ReplyDeleteenna nadakkudhu inga
ReplyDeletehe he
ReplyDelete