Header Ads



இதனை விதி என்பதா..? சதி என்பதா..??


சிங்கப்பூரை சேர்ந்த சீன பெண் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சோதனை குழாய் முறையில் குழந்தை பெற்றார். ஆனால், அந்த குழந்தையின் உடல் அமைப்பு மற்றும் தலைமுடியின் நிறம் மாறுபட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்தான் சோதனை குழாய் குழந்தை பெற்ற ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டார்.

அப்போது சோதனை குழாய் குழந்தை உருவாக்கும் போது கணவரின் உயிரணுவை இவரது கருமுட்டையுடன் சேர்ப்பதற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையுடன் சேர்த்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் அந்த ஆஸ்பத்திரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே நடந்த தவறுக்கு நஷ்டஈடு வழங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் முன்வந்துள்ளது.

No comments

Powered by Blogger.