Header Ads



குவைத் பாராளுமன்றம் முடங்கிப்போனது..!


குவைத்தில், எம்.பி.க்களுக்கும் அரசுக்கும் இடையே, மோதல் போக்கு தொடர்வதால், அந்நாட்டு பார்லிமென்டை, இளவரசர் ஒரு மாதத்துக்கு முடக்கி வைத்துள்ளார்.

குவைத்தில், 2006ம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில், எட்டு அரசுகள் பதவி விலகியுள்ளன. நான்கு முறை பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம், தேர்தல் நடந்தது. பார்லிமென்டில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள், நிதியமைச்சர் உள்ளிட்டோர் மீது, சரமாரியான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், பார்லிமென்ட் கூச்சல், குழப்பம் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. அமைச்சரவை கேட்டுக்கொண்டதற்கிணங்க, குவைத் இளவரசர், அல் சபா, பார்லிமென்டை, ஒரு மாதம் முடக்கி வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.