Header Ads



முஸ்லிம் பகுதியில் 32 அடி புத்தர் சிலை - முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஏமாற்றம்

திருகோணமலை மூதூர் பகுதியில் பௌத்த தொல்பொருள் நிலையம் நிலையமொன்றை அமைக்கவும், புத்தர் சிலையொன்றை அமைக்கவு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் அப்பகுதி மக்கள் தமது கவலையையும், கண்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மூதூர் ஜபல் நகரை அண்மித்ததாக அமைந்திருக்கும் மூன்றாம் கட்டை மலையடிவாரத்திலேயே இந்த புத்தர் சிலை நிறுவப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மலையச்சூழ 4 முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ள நிலையில் அப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிக்கவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் கிராமங்கள் சூழவுள்ள இம்மலைப் பகுதியில் 32 அடி உயரமான புத்தர் சிலை றிறுவப்படவுள்ளதாகவும், இதற்கென 12 அடி உயரமான தூண் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 இல் அப்பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்கான பிரதேசமாக இப்பகுதி பிரகடனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் பலத்த எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் அம்முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பில் மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களிடையே முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

இங்கு கவனிக்கத்தக்க அம்சம் யாதெனில் குறித்த பகுதியில் புத்தர் சிலை அமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தமக்கு இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக எழுத்து வடிவ ஆதாரங்களை தம்மிடம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை இவ்வாறான ஒரு விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆர்வமற்று செயற்படுகின்றமை குறித்து பிரதேச முஸ்லிம்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட:டுள்ளது.


2 comments:

  1. They will come only to ask the votes my dear they do not care about other matter. they are keeping the buttar silai in their home also so how they will worry about this/you

    ReplyDelete
  2. The mungs and gotabaya will ruin as soon as possible. dont warry.

    ReplyDelete

Powered by Blogger.