இலங்கை இராணுவத்தினர் 150 பேர் அமைதிகாப்பதற்காக லெபனான் செல்கின்றனர்
லெபனானின் அமைதிகாக்கும் பணிகளுக்காக 150 இராணுவ வீரர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிடுகின்றது.
இந்தக் குழுவில் 10 உத்தியோகத்தர்கள் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, ஹெய்ட்டியின் அமைதிகாக்கும் பணிகளுக்கு 7 உத்தியோகத்தர்களும், 111 இராணுவத்தினரும் அடுத்தமாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
சொந்த நாட்டில் இயல்பு வாழ்வு வளவைப்பதட்கு வக்கில்லை.லெபனானுக்கு குப்பை கொட்ட போகிறார்களாம்.
ReplyDeleteMeraan