முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி - வேறு எவரும் கோரமுடியாது - ஹாபிஸ் நஸீர்
கிழக்கு மாகாத்தில் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸுக்கே முதலமைச்சர் பதவி வழங்கபட வேண்டுமென்பதில் ஜனாதிபதியும், ஆளும்கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் தெளிவான நிலைப்பாட்டிலிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபீஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கே கிடைக்க வேண்டுமென்பது கட்சியின் நிலைப்பாடாகும். நிறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ள கட்சி முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். ஏனைய கட்சிகளுக்கு இவ்வாறான வாக்கு வங்கி இல்லை.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறிய கட்சிகள் முதலமைச்சர் பதவி கோருவது எவ்விதத்திலும் நியாயமாகாது. நியாயப்படுத்தவும் முடியாது.
கிழக்கில் முஸ்லிம்கள் 42 சதவீதமாக வாழ்கின்றனர். 75 சதவீதமான வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸுக்கே இருக்கிறது. வேறு எந்தக்கட்சியும் இதை மறுக்கமுடியாது. இந்த நியாயங்களை அடிப்படையாக வைத்து வேறு எவரும் முதலமைச்சர் பதவியை கோரமுடியாது. மறைந்த மர்ஹும் அஷ்ரப்பின் கனவும் இதுவாக காணப்பட்டது என்றார்.
So it's as what is expected. Mr.Hakeem puts his personal interest first before the Muslims of Sri Lanka. If he is not able to solve the Dambulla Mosque dispute amicably, that means in accordance with justice,whilst being Minister for Justice; what a single thing he can do being a First-Minister? it's a joke. Isn't it?
ReplyDeleteAre we going to elect this courageless man to rule Eastern Provincial Council, where a multi ethnic harmoney is paramount? Why cannot the voters put him under a real test, before we elect him to PC?
Here is the task. He should take all possible measures to retain the Mosque where it has been and make it public. Propose a new legislation and get it passed through the Parliament to make that Dambulla like attacks in future to be treated as "terorrism agisnt religion" with a punishment of 15 years or more impriosnment, if found guilty.
Can he do that? I bet he can't. Then don't dream the first minister job. You arn't suitable candidate nor the man from Sri Lanka Makkal Congress.
அழிந்த போகும் உலகத்தில், நன்றாக பதவியைப் பிடிப்பதற்கும்,அதிகாரம் பண்ணுவதற்கும்,சம்பாதிப்பதற்கும் மனிதன்
ReplyDeleteபேராவல் கொண்டலைகிறான்.வெட்கமாயில்லை.கேவலம் ஒரு பள்ளி உடைப்பை தடுக்க திராணியில்லை,இன்னொரு
இடத்தில் பள்ளி கட்டமாட்டோம் என்ற உறுதி மொழியுடன் கூடிய கையெழுத்து.வாய் சவடாலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.பதவியைக் காட்டி நன்றாக நம்மை பிரித்தாள்கிறாகள்.இப்படியே அறிக்கைகள் விட்டுக்கொண்டு ,
ஒருத்தரை ஒருத்தர் காட்டிக்கொடுத்துக் கொண்டு நன்றாக அரசியல் வியாபாரம் செய்து ஒட்டு மொத்த முஸ்லீம்களின்
தலையில் மண் அள்ளிப்போடுங்கள் .
Meeraan