Header Ads



சோமாலியா கடற்படை நிலைகள் மீது ஐரோப்பிய ஒன்றிய விமானப்படையினர் குண்டுவீச்சு

இந்திய பெருங்கடல் பகுதியில் பயணம் செய்யும் சரக்கு கப்பல்களை சோமாலியர்கள் கடத்தி சென்று பிணைத் தொகை பெற்று வருகின்றனர். இது அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே சோமாலியர்களிடம் இருந்து கப்பல்களை காக்க சர்வதேச நாடுகள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் அவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே அவர்களை ஒழிக்க சோமாலியர்களின் நிலைகள் மீது நேற்று ஐரோப்பிய யூனியனின் கடற்படை ஹெலிகாப்டர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. சோமாலியா கடற்கரையின் முடுக் மாகாணத்தில் உள்ள ஹேண்டுலே கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது அங்கு நிறுத்தியிருந்தர்களின் படகுகள் அவற்றை இயக்க சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் யாரும் கொல்லப்படவில்லை. இந்த தகவலை ஐரோப்பிய யூனியனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

சோமாலியர்களிடம் இருந்து கப்பல்களை காக்க கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் 10 கப்பல்களில் ரோந்து சுற்றி வருகிறது. நேட்டோ கப்பல்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. இவை தவிர அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா மற்றும் மலேசியா நாடுகளை சேர்ந்த கப்பல்களும் தங்கள் நாட்டு கடல் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் சோமாலியர்களை ஒழிக்க முடியவில்லை.
 

No comments

Powered by Blogger.