வடமாகாண அபிவிருத்தி ஆராய்வு கூட்டம் - முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்பு (படங்கள்)
வடமாகாண அமுலாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தில் 2011ம் ஆண்டுக்கான அடைவுகளும், 2012ம் ஆண்டுக்கான திட்டங்களும் தொடர்பான ஆராய்வுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை, 28 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச்சபை மண்டபத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வடமாகாண அமைச்சின் கீழ் செயற்படும் பல்வேறு திணைக்களங்களும் 2011ம் ஆண்டினது அடைவுகள் தொடர்பாகவும் 2012ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக எடுத்து விளக்கினர்.
இதில் மாகாணத்தின் விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களினது செயற்திட்டங்கள் தொடர்பிலும் கல்வியமைச்சினது செயற்திட்டங்கள் தொடர்பிலும் தத்தமது கருத்துக்களை மக்கள் தரப்பு பிரதிநிதிகள் பிரஸ்தாபித்தனர்.
இதில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) பாராளுமன்ற உறுப்பினர் உனேஷ் பாரூக் மாவட்டங்களின் அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது வடமாகாண அமைச்சின் கீழ் செயற்படும் பல்வேறு திணைக்களங்களும் 2011ம் ஆண்டினது அடைவுகள் தொடர்பாகவும் 2012ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக எடுத்து விளக்கினர்.
இதில் மாகாணத்தின் விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களினது செயற்திட்டங்கள் தொடர்பிலும் கல்வியமைச்சினது செயற்திட்டங்கள் தொடர்பிலும் தத்தமது கருத்துக்களை மக்கள் தரப்பு பிரதிநிதிகள் பிரஸ்தாபித்தனர்.
இதில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) பாராளுமன்ற உறுப்பினர் உனேஷ் பாரூக் மாவட்டங்களின் அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் முஸ்லிம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




முஸ்லீம்கள் முஸ்லீமாக வாழாத படியால்தான் நமக்கு அல்லாஹ்வின் சோதனைகள் வந்து கொண்டிருக்கிறது .
ReplyDeleteமாற்றுமத கலாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும்.சிலைகளுக்கு மாலை போடுவது , குத்து விளக்கு ஏற்றுவது
நமக்கு மாலை போடுவது போன்றவைகளை தவிர்த்துக்கொள்ளுவது நம் அனைவருக்கும் நல்லது .அல்லாஹ்
நமது ஈமானை உறுதிப்படுத்துவானாக.
Daoud Tharik .