Header Ads



மேற்கத்திய நாடுகளுடன் உறவை பேணும் இஸ்லாமிய சமூகத்தை வார்த்தெடுக்க நான் முயன்றேன்

’துப்பாக்கி முனையில் ஆட்சியை பறிகொடுத்த என்னை அமெரிக்கா ஆதரிக்கவில்லை’ என்று முன்னாள் மாலத்தீவு அதிபர் முஹம்மது நஷீத் கூறியுள்ளார்.

‘அமெரிக்காவின் தத்துவங்களுக்கு கட்டுப்பட்டு நான் ஆட்சியை நடத்தினேன். ஆனாலும், அமெரிக்கா என்னை ஆதரிக்கவில்லை’ என்று நஷீத் கூறுகிறார்.

‘தி ஐலண்ட் பிரசிடண்ட்’ என்ற டாக்குமெண்டரின் பிரச்சாரத்திற்காக அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளார் நஷீத். மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய உறவை பேணும் இஸ்லாமிய சமூகத்தை வார்த்தெடுக்க நான் முயன்றேன். ஆனால், எனது ஆட்சியை கவிழ்த்த முஹம்மது வஹீதியை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று நஷீத் ஆதங்கத்துடன் கூறுகிறார். மாலத்தீவில் உடனடியாக தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.