Header Ads



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 228 பேர் அனுமதி

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பல்வேறுபட்ட அனர்த்தங்கள் காரணமாக 228 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தேசிய மருத்துவமனையின் பயிற்சியளிக்கும் தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதில் 60 வீதி விபத்துக்கள், 49 வீடுகளில் இடம்பெற்ற விபத்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பட்டாசு கொழுத்தும் நடவடிக்கையின் போது அவதானமாக செயல்படுமாறு தேசிய மருத்துவமனையின் பயிற்சியளிக்கும் தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி  சொய்சா அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.