Header Ads



ஒரு மாத குழந்தையை கிணற்றில் வீசிய 17 வயது தாய் கைது

களுத்துறை, தொடங்கொடை, கதனகொட பிரதேசத்தில் ஒரு மாத பெண் சிசுவொன்றை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் 17 வயதான தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த தாயினால் குழந்தை கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பின்னர் அவர் கூக்குரலிடும் சத்தம் கேட்டு பிரதேசவாசிகள் சிசுவை மீட்டு நாகொடை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடங்கொடை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.