Header Ads



யாழ்ப்பாணத்தில் கடும் மழை - பொம்மைவெளி முஸ்லிம்கள் பாதிப்பு (படம் இணைப்பு)


யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர். 

யாழ்.நகரப் பகுதிகளில் கனமழை காரணமாக வீதிகளில் பெருமளவில் வெள்ளம் தேங்கியது. அத்துடன் அங்காடி வியாபார நிலையங்களுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்ததால் பலத்த சிரமங்களை வியாபாரிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

யாழ்ப்பாணத்தின் மிகத் தாழ்ந்த பகுதிகளான பொம்மைவெளிப் பகுதியில் கனமழை காரணமாக அங்குள்ள குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்துடன் நல்லூர் யமுனா ஏரிப் பகுதி மற்றும் அரியாலைப் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கினர்.

இந்த மழையால் ஏற்பட்ட வெள் ளத்தால் அவர்களின் அன்றாடச் செயற்பாடுகள் யாவும் தடைப்பட்ட நிலையில் இருந்தன. யாழ்.தனியார் பஸ் நிலையப் பகுதி பண்ணை வீதி என்பனவும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டன.

மிகக் குறைந்தளவான மீன்களே சந்தைக்கு வந்திருந்த நிலையில் அவற்றின் விலைகளும் மிகவும் உயர்வடைந்து காணப்பட்டன.










No comments

Powered by Blogger.