இலங்கையில் பேஸ்புக் தொடர்பில் புதிய கட்டுப்பாடு வருகிறது
பேஸ்புக் உட்பட சமூக வலையமைப்பு இணையத்தளங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் சிறுவாகளுக்குப் பொருத்தமற்ற விடயங்களை இலங்கையில் பார்வையிட முடியாதபடி சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வரவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட செயற்பாட்டுக்கு என அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.வெகுசனத் தொடர்பு சாதனங்கள், நீதிமன்றம், சுகாதாரத்துறை ஆகியவற்றின் உதவியும் இதற்குக் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment