Header Ads



சவுதிஅரேபியாவுக்கு ஈரான் அச்சுறுத்தலாம் - அமெரிக்கா போர் விமானங்கள் வழங்குகிறது

சவுதிஅரேபியாவுக்கு அமெரிக்கா போர் விமானங்களை விற்கிறது.   சவுதிஅரேபியாவுக்கு அதன் அண்டை நாடான ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது. அதற்காக தனது நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. 

இந்த நிலையில் போர் விமானங்களை வாங்குவது குறித்து கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி சவுதி அரேபியாவுக்கு 84 போயிங் எப்-15 ரக போர் விமானங்களும், மற்றும் 70 அதிநவீன போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்குகிறது. மேலும் ஹெலி காப்டர்கள், ஏவுகணைகள், வெடி குண்டுகளும் வழங்கப்பட உள்ளன. அவற்றின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி.

இதற்கான அதிகாரப் பூர்வ தகவல் ஹவாயில் இருந்து நேற்று வெளியிடப்பட்டது. தற்போது அங்குதான் அதிபர் ஒபாமா விடுமுறையை கழித்து வருகிறார். 

No comments

Powered by Blogger.