Header Ads



மாலைதீவில் அடிக்கல் நாட்டிய மஹிந்த


17வது சார்க் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, இன்றைய தினம் அங்கு அமைக்கப்படவுள்ள பாதை ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். ஜனாதிபதி செய்தி ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மாலைத்தீவின் அட்தா நகரில் இந்த பாதை நிர்மானிக்கப்படவுள்ளது. இது இலங்கை அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது. 4.5 கிலோமீற்றர் நீளமான இந்த பாதைக்கு, 10 மில்லியன் டொலர்களை இலங்கை வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.