Header Ads



கடாபியின் மரணம் - விளக்கம் தேவையாம் இலங்கைக்கு

42 வருடங்களாக லிபியாவை ஆட்சி செய்த கேணல் மொஹமர் அல் கடாபி  கொல்லப்பட்ட முறை குறித்து, கேணல் கடாபியின்  மரணம் தொடர்பான சம்பவங்கள் குறித்து விளக்கம் ஒன்று அவசியம் என இலங்கை அரசாங்கம் கருதுவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக பல நாடுகள் அதிர்ப்தி வெளியிட்டுள்ளன. அவர் கொல்லப்பட்டமையானது மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்றதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து தெளிவான விளக்கம் ஒன்று தரப்பட வேண்டும் என அமெரிக்காவும், ரஸ்யாவும் வோண்டுகோள் விடுத்துள்ளன. இது தவிர, வெளிப்படையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.கேணல் கடாபியின் கொலை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

அவர் கைது செய்யப்பட்டபோது உயிருடன் இருந்ததாக விடியோ ஒளிநாடாக்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னரே கேணல் கடாபி, லிபிய தேசிய இடைக்கால சபையைச் சேர்ந்த ஆயுத தாரிகளால் கொலை செய்தனர்.

இதேவேளை, கேணல் கடாபியின்  மரணம் தொடர்பான சம்பவங்கள் குறித்து விளக்கம் ஒன்று அவசியம் என இலங்கை அரசாங்கம் கருதுவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.