ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு இலங்கையர் வபாத்தானார்
மாத்தளை தரலந்த எனுமிடத்தைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் முஹமட் அஸ்வர் (வயது - 69) மக்காவில் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காகச் சென்ற இவர் நேற்று 18 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாகவும் அவரின் ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம்பெற்றதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இலங்கை கண்டியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்தவாரம் மக்காவில் வாகன விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவருடன் இம்முறை இலங்கையைச்சேர்ந்த மூவர் மக்காவில் மரணமாகியுள்ளர்.
இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காகச் சென்ற இவர் நேற்று 18 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாகவும் அவரின் ஜனாஸா நல்லடக்கம் மக்காவில் இடம்பெற்றதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே இலங்கை கண்டியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்தவாரம் மக்காவில் வாகன விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவருடன் இம்முறை இலங்கையைச்சேர்ந்த மூவர் மக்காவில் மரணமாகியுள்ளர்.

Post a Comment