Header Ads



கடாபிக்கு புகலிடம் வேண்டாம் - ஆபிரிக்க நாடுகளுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

தலைமறைவாகியுள்ள லிபிய தலைவர் முஅம்மர் கடாபிக்கு ஆபிரிக்க நாடுகள் புகலிடம் வழங்கக் கூடாதென பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள கடாபிக்கு லிபியாவின் அயல்நாடுகளுக்கு இதற்கான பொறுப்பு உள்ளதாக பிரிதானிய செயலாளர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.

தமது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கடாபி இருப்பதை கண்டறிந்தால் அந்த நாட்டு மக்கள் லிபியாவிடமோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமோ அவரை ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள கடாபியை கண்டறிவதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்தும் தமது நாடு வழங்கும் எனவும் லிபிய தலைநகர் ரிப்போலியில் வைத்து வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.