Header Ads



உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு

எதிர்வரும் மே மாதம் 20,21,22 ஆம் திகதிகளில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளர்களாகக் கலந்துகொள்ள விரும்புபவர்களும் ஆய்வரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை வாசிக்க விருப்பமுடையோரும் மாநாட்டு மலருக்கான கட்டுரை,கவிதை சமர்ப்பிக்க விரும்புவோரும் கவியரங்கில் பங்கேற்க விரும்புவோரும் இலங்கை ஏற்பாட்டுக் குழுவுடன் உடனடியாகத் தபால் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடிதமூலம் தொடர்பு கொள்பவர்களுக்கே விபரங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது. கடித உறையில் இடதுபக்கத்தில் "உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு2011 மலேசியா' எனக் குறிப்பிட்டு இம்மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புமாறு இலங்கை ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
SECRETARY,
ORGANIZING COMMITTE OF SRILANKA,
WITAL CONFERENCE MALAYSIYA-2011
NO-09,SAUNDER'S COURT,
COLOMBO-02.
EMAIL:hsnLmt @ gmail.com
doctorthassim@sltnet.lk

No comments

Powered by Blogger.