Header Ads



பொலிஸாருக்கு SMS அனுப்பலாம்

தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொதுமக்கள் குறுந்தகவல்கள் (எஸ். எம். எஸ்) மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

119 என்ற அவசர தொலைபேசி அழைப்பு மூலமாக தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை அறிவிக்கும் திட்டங்களுக்கு சமமானதாகவே எஸ். எம். எஸ். சேவையையும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.