மாலைதீவில் இலங்கை பல்கலைக்கழகம்
மாலைதீவில் முகாமைத்துவபீடம் ஒன்றை நிறுவி அதனை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பில் மாலைதீவு அதிகாரிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதேவேளை மாலைதீவு உயர்கல்வி நிறுவகம் ஒன்றினை இலங்கையில் நிறுவுவது தொடர்பிலும், இரு நாடுகளுக்கிடையிலான புலமைப்பரிசில் திட்டங்களையும் விஸ்தரிப்பது தொடர்பிலும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஹுஸைன் ஷிஹாப்புக்கும் இடையில் உயர்கல்வி அமைச்சு காரியாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

Post a Comment