Header Ads



யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு 8 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


யாழ் ஒஸ்மானியா பாடசாலையின் திருத்த வேலைகளுக்காக 8 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். 

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒஸ்மானியா  பாடசாலையின் திருத்த வேலைகளுக்காக 8 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு ஒப்பந்தகாரர்களுக்கான கேள்வியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் முஸ்லிம் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள உள்வீதிகள் புனரமைப்புக்கென 26 மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.