(EXCLUSIVE) உலகசாதனை பாற்சோறு சாப்பிட நமக்கும் ஒரு வாய்ப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவி ஏற்பு நிகழ்வை முன்னிட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி உலகில் மிகப்பெரிய பாற்சோறு தயாரிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
65 ஆயிரம் பேர் சாப்பிடக் கூடிய இந்த பாற்சோற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைக்க உள்ளார்.
500 சமையற் காரர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படவுள்ள இந்த பாற்சோற்றுக்கு 7 ஆயிரம் கிலோ மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 1.200 கிலோ பச்சை அரிசி, 300 கிலோ மர முந்திரிகை, 250 கிலோ கருப்பட்டி, 250 கிலோ உலர்ந்த திராட்சை, 150 கிலோ எண்ணெய், 150 கிலோ தேன் பாணி, 24 கிலோ உப்பு, 1.500 தேங்காய்கள், 3.500 லீட்டர் தண்ணீர் என்பன இதற்காகப் பயன்படுத்தப்படும்
நவம்பர் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள 'சுதந்திரம்' கண்காட்சியில் இந்த பாற்சோறு பகிரப்படவுள்ளது.
65 ஆயிரம் பேர் சாப்பிடக் கூடிய இந்த பாற்சோற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைக்க உள்ளார்.
500 சமையற் காரர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்படவுள்ள இந்த பாற்சோற்றுக்கு 7 ஆயிரம் கிலோ மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 1.200 கிலோ பச்சை அரிசி, 300 கிலோ மர முந்திரிகை, 250 கிலோ கருப்பட்டி, 250 கிலோ உலர்ந்த திராட்சை, 150 கிலோ எண்ணெய், 150 கிலோ தேன் பாணி, 24 கிலோ உப்பு, 1.500 தேங்காய்கள், 3.500 லீட்டர் தண்ணீர் என்பன இதற்காகப் பயன்படுத்தப்படும்
நவம்பர் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ள 'சுதந்திரம்' கண்காட்சியில் இந்த பாற்சோறு பகிரப்படவுள்ளது.
Post a Comment