Header Ads



ஹஜ் கடமையின் போது 5 இலங்கையர் வபாத்தாகினர்


இலங்கையிலிருந்து இம்முறை புனித ஹஜ் கடமைக்காக மக்கா சென்ற 5 முஸ்லிம்கள் வபாத்தாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இம்மரணங்கள் இயற்கையானவை எனவும் அமைச்சு அறிவித்தள்ளது. இவர்களில் கொழும்பு மற்றும் மாத்தறையைச் சேர்ந்த இருவர் கடந்த புதன்கிழமை வபாத்தாகியுள்ளனர்..

மற்றைய இருவரின் ஜனாஸாக்கள் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.
அடையாளங் காணப்பட்ட பின்னர் ஜனாஸாக்களை கூடிய விரைவில் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

ஏற்கனவே காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்து அவரது ஜனாஸா அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந;தமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.