Header Ads



காசாவில் இஸ்ரேல் எந்த போர்க்குற்றத்தையும் இழைக்கவில்லை, மக்களின் உயிரிழப்புகள் மிகக் குறைவானவை.


அமெரிக்க  (ABS) தொலைக்காட்சிக்கு நெதன்யாகு கீழ்வருமாறு தெரிவித்துள்ளான்: 


"காசாவில் இஸ்ரேல் எந்தவொரு போர்க்குற்றத்தையும் இழைக்கவில்லை; நவீன வரலாற்றில் நடந்த எந்தவொரு போருடனும் ஒப்பிடுகையில், இப்பகுதியில் ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகள் மிகக் குறைவானவை. காசாவில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகப் பேசுவது அபத்தமான ஆதாரமற்ற பேச்சு."


"நாங்கள் போர்க்குற்றங்களை இழைத்ததாகக் கூறியது யார்? ஊழல் நிறைந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றமா? பாலஸ்தீனர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய அந்த இயக்கத்தின் உறுப்பினர்களைக் குறிவைப்பதற்கு முன்னதாக, ஆபத்தான பகுதிகளை விட்டு வெளியேறுமாறு காசா பகுதி மக்களுக்கு நாங்கள் லட்சக்கணக்கான செய்திகளையும் தொலைபேசி அழைப்புகளையும் விடுத்திருந்தோம்."


 "எங்களுக்கு இனப்படுகொலை செய்யும் எண்ணம் இருந்திருந்தால், நாங்கள் இத்தகைய செய்திகளை அனுப்பியிருக்க மாட்டோம்; ஆனால், பொதுமக்களை வெளியேற அனுமதிக்க மறுத்த அந்த இயக்கம்தான் இனப்படுகொலைக்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது." See less

No comments

Powered by Blogger.