ஏப்ரல் 19 விசேட பிரார்த்தனை தினம்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 'தாக்குதல் தொடர்பான உண்மைகள்' வெளிவர வேண்டும் என்பதே இந்தப் பிரார்த்தனை தினத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment