Header Ads



கத்தார் பிரதமரின் வீட்டில், நீண்ட காலமாக பணியாற்றிய இலங்கைப் பெண் காலமானார்


கத்தார் பிரதமரின் வீட்டில், மிக நீண்ட காலமாக பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த,  சகோதரரி  ஸமத் சித்தி ரைஹானி கத்தாரில் 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை  காலமானார். 


இவர் கொழும்பு - கொம்பனித் தெரு பிரதேசத்தை சேர்ந்தவராவார்.


 கத்தாரில் ஷேக் ஜாஸிம் முஹம்மத் ஹமத் அல் தானி அவர்களிடம் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்த சகோதரரி  ஸமத் சித்தி ரைஹானி அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 16-07-2025 புதன்கிழமை மாலை  மஃரிப் தொழுகையுடன் (மஃரிப் தொழுகைக்கான நேரம் மாலை 6:27) கட்டார் அபூஹமூர் மையவாடியில் இடம்பெறும்.


மஃரிப் தொழுகைக்கு அபூஹமூர் மஸ்ஜிதிற்கு சமூகமளித்து, இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து பிரார்த்திப்பதன் மூலம் இரண்டு கீராத் நன்மைகளைக் பெற்றுக்கொள்வோமாக.

No comments

Powered by Blogger.