Header Ads



சமையல் எரிவாயு பிரச்சினை 40 வருடங்களாக காணப்படுகிறது - அமைச்சர் ரமேஸ் பத்திரன


நாட்டில் சமையல் எரிவாயு ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் பல குறைபாடுகள் உள்ளதென தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன, அது பாரிய குறைபாடு என்றும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனிகம தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாட்டில் சமையல் எரிவாயு ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் குறைபாடு உள்ளதென்பதை ஏற்றுக்கொள்கிறோம். அது எமது ஆட்சியில் மாத்திரமல்ல. கடந்த 40 வருடங்களாக இந்தப் பிரச்சினை காணப்பட்டது.

அதனை உள்ளார்ந்த ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் தவறு ஒன்று ஏற்பட்டால் அந்தத் தவறை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றார்.

No comments

Powered by Blogger.