காணாமல் போன 2 சிறுவர்கள் - மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
கொடதெணியாய பொலிஸ் பிரிவின் வத்தேமுல்ல பாந்துராகொடை பிரதேசத்தை சேர்ந்த உறவு முறை சிறுவர்கள் இருவர் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போயுள்ளனர்.
10 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு இதுவரை எவ்வித தகவல்களையும் கண்டறிய முடியவில்லை.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த சிறுவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
Post a Comment