Header Ads



பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா காரணமல்ல - நல்லாட்சியின் திட்டங்களை கைவிட்டமையே காரணம் - ரணில்


இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் கொரோனா இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய நிலைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை கைவிட்டால் கூடியவிரைவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர், ஓய்வூதியம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பணமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி கொரோனாவிற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது அரசாங்கம் 2019 இல் தனது பொருளாதார கொள்கையை மாற்றியதை தொடர்ந்தே வீழ்ச்சி ஆரம்பமானது என  முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் கொரோனாவால் உருவான பிரச்சினைகள் மாத்திரம் காணப்படுகின்றது, எங்கள் நாட்டில் கொரோனாவாலும் அரசாங்கத்தினாலும் ஏற்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு நேபாளத்தை விட குறைந்துள்ளது எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.