அருணபுர கிராம மக்களின் முன்மாதிரி செயற்பாடு
அநுராதபுரம் – தலாவ, புதிய ஹங்குராங்கெத்த பிரிவின் அருணபுர கிராமத்தில் வாழும் 25 குடும்பங்களை சேர்ந்த மக்கள், தமக்கான 2000 ரூபா கொடுப்பனவை COVID நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
அவர்கள் இடுகம COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 87,000 ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் நாளாந்த வருமானத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபாவை தமது இன்னலையும் கருத்திற்கொள்ளாது அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், இந்த பணத்தை COVID காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என நன்கொடையளித்த மக்கள் கூறியுள்ளனர்.
Post a Comment