Header Ads



தாய்நாட்டை நேசிக்கின்ற போதும் அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை - வைத்தியத்துறையில் முன்னனேறவே எதிர்பார்க்கிறேன் - விமுக்தி


இலங்கையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடும் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

தான் அரசியலில் ஈடுபடப் போவதாக வௌியாகும் செய்திகளில் உண்மை இல்லை எனவும் அவர் அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார். 

பிரித்தானியாவில் வைத்திய துறையில் பணியாற்றி வருவதாகவும் அதில் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

தாய்நாட்டை நேசிக்கின்ற போதும் அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை எனவும் அதனால் தான் குறித்து வௌியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் விமுக்தி குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.