Header Ads



சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் மருந்துகளை எந்தச் சந்தர்ப்பங்களிலும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்


சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் மருந்துகளை எந்தச் சந்தர்ப்பங்களிலும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்துகளைக் கொடுக்கக் கூடாது என்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை சுவாச நோய் நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் வேகமாக கொரோனா பரவுவதால், குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும், ஒரு குழந்தைக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், தகுதியான வைத்தியரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.