Header Ads



24 மணிநேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டது


மேல் மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று (01) முதல் ‘அஸ்ட்ரா செனெகா' கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

 “ கொழும்பு − விஹாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில்  இன்று காலை 8:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள், 24 மணிநேரமும் முன்னெடுக்கப்படும் என இராணுவத்  தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த செயற்றிட்டத்தை  இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 24 மணிநேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டது  இதுவே முதன்முறையாகும்.

No comments

Powered by Blogger.