இலங்கை அணி வீரர்கள் நெருக்கடி நிறைவுக்கு வந்தது - இறுதி நேரத்தில் கைச்சாத்திட்டனர்
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட வீரர்கள் நேற்று (06) மாலை நாடு திரும்பினர்.
இதனையடுத்து, கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திவதற்கு இன்று (07) காலை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் நாடு திரும்பிய அனைத்து வீரர்களும் கொடுத்த கால எல்லைக்குள் எதிர்வரும் வருடத்திற்கான மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் தரப்படுத்தலின்போது, பின்பற்றப்பட்ட நடைமுறை வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்ட நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து நோக்கி பயணமானது.
இதேவேளை, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான கால அவகாசம் ஒன்றை வழங்கி குறித்த காலப்பகுதிக்குள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத வீரர்களை இந்தியாவுடனான போட்டியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பரிசீலிக்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்திருந்தது.
Post a Comment