தீப்பிடித்த கப்பல் - பாராளுமன்ற சிறப்பு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை
இலங்கைக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராய பாராளுமன்ற சிறப்பு தெரிவுக் குழுவை நியமிக்குமாறு கோரிய பரிந்துரை, ஐக்கிய தேசியத் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பியால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கடல் சூழலுக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட சேதங்கள், தேசிய பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றை ஆராய்வது தொடர்பிலேயே குழுவை நியமிக்குமாறு கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கை, பாராளுமன்றத்தின் சமீபத்திய ஒழுங்கு புத்தகத்தின் துணைப் பகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளதுடன், பின்னர் ஒரு நாளில் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படவுள்ளது.
Post a Comment